காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் பெண்கள் சத்திர சிகிச்சை பிரிவு இன்று (26.11.2017) கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவினால் திறந்து வைக்கப்பட்டது.
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஷார், மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர். கே.முருகானந்தன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

