இச் சம்பவம் சனிக்கிழமை இரவு இடம் பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பைச் சேர்ந்த படகு உரிமையாளர் பிரபாகரன், மீனவர் தயாபரன் ஆகியோர் சனி(04.11.2017) மாலை 6.30 மணியளவில் கற்றொழிலுக்குச் சென்றுள்ளனர். கடலில் மீன்பிடித்து விட்டு இரவு 9.30 மணியளவில் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தவேளையில் திடீரென ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு காரணமாக படகு கவிழ்ந்துள்ளது.
கடந்த சில தினங்களாக கிழக்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-செ.துஜியந்தன்-