தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன ஒன்றிணைந்து இளைஞர் கழகங்களினூடாக இளைஞர் அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன் நாடுகளுக்கிடையே சர்வதேச உறவுகளையும் ஏற்படுத்தி இளைஞர் வேலைத்திட்டங்களை வலுப்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் எதிர்வரும் 28 ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவிருக்கும் சர்வதேச இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டத்திற்கு மட்டக்களப்பு எருவிலை சேர்ந்த முன்னைநாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவரும் ம.தெ.எருவில் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவருமான இரத்தினையா வேணுராஜ் என்பவர் பங்கேற்க உள்ளார். இக்குழுவில் இலங்கையில் இருந்து 12 பேர் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-துறையூர் தாஸன்-