சிறுநீரக பாதிப்பு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த இயக்குநா் மகேந்திரன் இன்று காலை காலமானதாக அவரது மகன் ஜான் மகேந்திரன் தொிவித்துள்ளாா்.
ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவா் மகேந்திரன். தொடா்ந்து ஜானி, உதிரிப்பூக்கள், கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வழங்கியிருந்தாா். 1980ல் இவா் இயக்கிய நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற ஒரே படத்தின் மூலம் 3 தேசிய விருதுகளை பெற்றிருந்தாா்.
'முள்ளும் மலரும்' மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்
மேலும் சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம், ரிஷிமூலம், ஆடு புலி ஆட்டம், காளி உள்ளிட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளாா். இறுதியாக கடந்த 2006ம் ஆண்டு சாசனம் என்ற படத்தை மகேந்திரன் இயக்கியிருந்தாா்.
சமீபத்தில் வெளியான விஜய்யின் தெறி, ரஜினிகாந்தின் காலா, பூமராங் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தாா்.
தல அஜித்தை இயக்க ஆசைப்பட்டு நிறைவேறாமலே மரணித்த மகேந்திரன்
இந்நிலையில், சிறுநீரக பாதிப்புக் காரணமாக கடந்த ஒரு வாரமாக சிகிச்சைப் பெற்று வந்தாா். அவா் இன்று காலை உயிாிழந்ததாக அவரது மகன் தொிவித்துள்ளாா்.
மகேந்திரனின் உடல் அவரது இல்லத்தில் காலை 10 மணி முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து இன்று மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினா் தொிவித்துள்ளனா்.
ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவா் மகேந்திரன். தொடா்ந்து ஜானி, உதிரிப்பூக்கள், கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வழங்கியிருந்தாா். 1980ல் இவா் இயக்கிய நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற ஒரே படத்தின் மூலம் 3 தேசிய விருதுகளை பெற்றிருந்தாா்.
'முள்ளும் மலரும்' மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்
மேலும் சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம், ரிஷிமூலம், ஆடு புலி ஆட்டம், காளி உள்ளிட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளாா். இறுதியாக கடந்த 2006ம் ஆண்டு சாசனம் என்ற படத்தை மகேந்திரன் இயக்கியிருந்தாா்.
சமீபத்தில் வெளியான விஜய்யின் தெறி, ரஜினிகாந்தின் காலா, பூமராங் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தாா்.
தல அஜித்தை இயக்க ஆசைப்பட்டு நிறைவேறாமலே மரணித்த மகேந்திரன்
இந்நிலையில், சிறுநீரக பாதிப்புக் காரணமாக கடந்த ஒரு வாரமாக சிகிச்சைப் பெற்று வந்தாா். அவா் இன்று காலை உயிாிழந்ததாக அவரது மகன் தொிவித்துள்ளாா்.
மகேந்திரனின் உடல் அவரது இல்லத்தில் காலை 10 மணி முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து இன்று மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினா் தொிவித்துள்ளனா்.
