முப்பத்தொரு வருட நினைவில் எந்த ஒரு நீதியும் இதுவரையில்லாத நிலையில் சத்து ருக்கொண்டான் இனப்படு கொலையை மனதில் ஏத்தி அஞ்சலி செய்கிறோம். இலங் கையில் எந்த அரசு ஆட்சிபீடமேறினாலும் இனப்படு கொலைக்கான நீதி தமிழர் களுக்கு கிடைக்கப்போவதில்லை சர்வ தேசமும் தீர்வையும் தரவில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சி ஊ டகச் செயலாளருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
சத்துருக்கொண்டான் இனப்படு கொலை யின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் (09) தொடர்பாக வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான் பனிச்சையடி பிள்ளை யாரடி கொக்குவில் போன்ற கிராமங்களிலுள்ள வீடுகளில் தங்கி யிருந்த பொதுமக்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 09 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் சத்துருக்கொண்டான் இராணுவ முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இவற்றில் 5 விசேட தேவையுள்ள பிள்ளைகள். மேலும் 10 வயதிற்குட்பட்ட 42 பிள்ளைகள்இ 85 பெண்கள் 28 முதி யவர்கள் என பலதரப்பட்டவர்கள் ஈவிரக்கமின்றி கொலை செய்யப்பட்டனர்.
சம்பவம் இடம்பெறும் முதல் நாள் அன்று இராணுவ முகாம்களிலிருந்து இராணுவ உளவாளிகள் நோட்டமிட்ட நிலையில் நன்கு திட்டமிட்டு அடுத்த நாள் அதாவது 1990.09.09 மாலை வேளையில் இராணுவ சீருடையணிந்தவர்கள் சத்துருக்கொண்டான் முகாமுக்கு வருவார்கள் அங்கே உங்களுக்கு கூட்டம் ஒன்று இருக்கிறது என்று கூறி அழைத்துச்செல்லப்பட்டனர்.
நடக்க முடியாதவர்களை இராணுவ லொறிகளில் ஏற்றிச்சென்று ஆண்கள் பெண்கள்இ பிள்ளைகள் என வேறு வேறாக பிரிக்கப்பட்டனர். சிங்கள இராணுவமும் முஸ்லிம் ஊர்காவல் படையும் இணைந்தே இந்த கோர தாண்டவத்தை அரங்கேற்றியது. இவற்றுக்கெல்லாம் தயாரான நிலையில் அன்று மாலை 7.00 மணியளவில் இவர்கள் வாளினால் வெட்டியும்கத்தியினால் குத்தியும் துப்பாக்கிகளினால் சுடப்பட்ட அப்பாவி பொதுமக்கள் ரயர் போட்டு எரிக்கப்பட்டனர். இவ்வாறு கொலை செய்யப்பட்ட மக்கள் குழிகளில் தூக்கி வீசப்பட்டனர்.
அன்று இரவு 8.00 மணி வேளையில் பெரும் கூக்குரல் சத்தமும் சிறுவர்களின் மரண ஓலமும் எங்கும் எதிரொலிச்ச வண்ணம் காணப்பட்டது.
சத்துருக்கொண்டான் படுகொலை சத்துருக்கொண்டான் பிள்ளையாரடி கொக்குவில் பகுதியில் தங்கியிருந்த 187 தமிழ் மக்களை இலங்கை அரச படைகளும்இ படைகளால் பயன்படுத்தப்பட்ட தமிழ் ஆயுத குழுவும் ஊர்காவல் படையினரும் இணைந்தே இப் படுகொலையினை முன்னெடுத்தனர். இது தொடர்பாக இலங்கை அரசு இரு விசாரணைக் குழுக்களை அமைத்தும் எவரும் கைது செய்யப்படவில்லை.
இச்சம்பவத்தை விசாரணை செய்த நீதிபதி அறிக்கைப்படி 27 வயதான மோகன சுந்தரி எனும் தாயும் அவரது 3 மாதக் குழந்தையும் படையினரால் 'மண்ணா' கத்திகளால் சாகும்வரை குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அத்தோடு 5 கைக்குழந்தைகள் பத்து வயதுக்குக் குறைவான 42 சிறுவர்கள் 85 பெண்கள் 28 முதியவர்கள் இச்சம்பவத்தின் போது படுகொலை செய்யப்பட்டனர்.
இப்போது 30 வருடங்கள் கடந்தும் இந்த படுகொலைக்கு இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை. கடந்த 30 வருடங்களில் ஐந்து தடவை ஆட்சிகள் மாறிமாறி சிங்களத்தலைவர்கள் அலங்கரிக்கின்றனர். ஆனால் ஜனாதிபதியோ பிரதமரோ அரசாங்கமோ தமிழ் இனப்படுகொலைக்கான எந்த நீதியையும் பெற்றுத்தரவில்லை.
சர்வதேச நாடுகளும் இது தொடர்பாக எமக்கு நீதி நியாயங்களையோ அரசியல் தீர்வையோ பெற்றுத்தரவில்லை. ஏற்கனவே இருந்த அரசியல் யாப்புகளை மாற்றுவதற்குக் காட்டும் அக்கறையை தமிழினப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும் என்ற மனநிலை எந்த அரசாங்கங்களுக்கும் இருந்ததில்லை.
ஆனால் தமிழர்களாகிய நாம் எமக்கு ஏற்பட்ட இன்னல்கள் படுகொலைகள் அவலங்கள் என்பவற்றை மறக்காமல் அந்தந்த தினங்களில் எத்தனை வருடங்கள் கடந்தாலும் நினைவு கூரவேண்டியது எமது தார்மீக கடமையாகும். அவ்வாறு செய்வதன் ஊடாகவே எமது இளைய சந்ததியினர் இளைஞர்கள் மாணவர்கள் எமது வரலாற்றை அறிய ஏதுவாக இருக்கும்.
ஈழ விடுதலை வரலாறுகளை இப்போது இருக்கும் நாம் அடுத்த சந்ததிகளுக்கு எடுத்துக்கூறாமல் விடுவோமானால் அல்லது இவ்வாறான நினைவு தினங்களை அனுஷ்டிக்காமல் விடுவோமானால் எமது வரலாறுகளை நாமே மறைப்பதற்கு தூண்டுகோலாய் அமையும் எனவும் மேலும் கூறினார்.
செய்தியாளர் : பா. மோகனதாஸ்
